Tuesday, 18 May 2021

கற்பனை கோடுகள் - சிறுகதை

 கற்பனை கோடுகள்

வாசலையே பார்த்தவாறு இருந்தாள் துர்கா. அவள் கணவன் வரும் நேரம் தான், எப்போதும் ஒன்பது மணிக்கு வரும் கணவன் இன்றோ மணி பத்தாகியும் இன்னும் வரவில்லை.

இன்று காலை வேறு அவள் பார்த்த ஒரு சம்பவம் திரும்ப திரும்ப வந்து மனதில் போராட்டத்தை அதிகபடுத்தியது.

காலையில் கணவன் வேலைக்கு சென்ற பிறகு காய்கறிகள் வாங்க கடை வீதிக்கு சென்றாள். அப்போது அங்கு ஒரு கடையின் முன்பு அவள் கண்ட காட்சிதான் அவள் மனதை உறுத்தியது.

அவள் கணவன் சிவா அங்கு ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டு இருந்தான். துர்காவும் தூரத்தில் இருந்து அந்த பெண்ணின் முகத்தை உற்று நோக்கினாள். ஆனாலும் அந்த பெண்ணை எங்கும் இதற்கு முன்பு பார்த்ததில்லை.

அவள் கணவனோ அந்த பெண்ணின் கையில் கொஞ்சம் பணத்தை வற்புறுத்தி கொடுப்பதை பார்த்தாள். அது மேலும் அவள் சந்தேகத்தை வலுவாக்கியது.

வேலைக்கு செல்ல வேண்டிய நேரத்தில் இங்கு என்ன பேசிக்கொண்டு இருக்கிறார் இரவு வீட்டுக்கு திரும்பி வரும்போது விசாரிக்க வேண்டும் சும்மா விட கூடாது. “அவளுடன் அவருக்கு என்ன உறவு என்று விசாரிக்காமல் விடமாட்டேன்’” என்று மனதுக்குள் எண்ணியவாறே அவள் கணவன் அங்கிருந்து நகர்ந்ததை கண்டு வீட்டுக்கு வந்தாள்.

வீட்டுக்கு வந்தாலும் துர்காவுக்கு வேலை ஓடவில்லை அதே சிந்தனையாக இருந்தாள் .இப்போது நேரம் வேறு அதிகமாகி விட்டதால் கோபத்தின் உச்சியில் இருந்தாள்.

சிவாவுக்கு இன்று தொழிற்சாலையில் ஒரு முக்கியமான வேலை. உற்பத்தி செய்ய பயன்படும் ஒரு முக்கியமான இயந்திரம் ஒன்று திடிரென பழுதாகி விட்டது.அதனால் மொத்த உற்பத்தி பாதிக்கப்பட்டுவிட்டது.

அதனை சரி செய்த பிறகே வீட்டிற்கு செல்ல கூடிய சூழ்நிலை எனவே அதனை சரி செய்யும் பொறுப்பில் ஈடுபட்டிருந்தான்   

மணி பதினொன்று. சிவா வீட்டிற்குள் நுழைந்தான். நுழைந்ததும் மனைவியிடம் “ சாப்பாடு எடுத்து வை நான் குளிச்சுட்டு வந்துடுறேன் என்றான்.”

துர்கா அவனிடம் “ நில்லுங்க எங்க போய்ட்டு வர்றீங்க? என்றாள்.

“வேற எங்க போவேன் வேலைக்குதான்” என்றான்.   

‘ஓ அப்படியா, அப்ப அவ யாரு’ என்றாள். கோபத்தில் அவள் முகம் சிவந்து இருந்தது .

ஏற்கனவே இயந்திரத்துடன் போராடி சரி செய்து கலைத்து போய் வந்திருந்த சிவா எதை பற்றி கேட்கிறாள் என்று யோசிக்க முடியாமல் “ முதலில் சாப்பாடு எடுத்து வை , பிறகு பேசலாம் என்றான்.

“இப்ப சாப்பாடா முக்கியம் எனக்கு உண்மை தெரிஞ்சாகனும், காலைல கடை வீதில ஒரு பொண்ணோட பேசிக்கிட்டு இருந்தீங்க அவ கையில பணம் குடுத்தீங்களே அவ யாரு?” என்றாள் கத்தியபடி

“ அவுங்களா !  போன வாரம் உங்க அப்பா ஆக்சிடென்ட் ஆகி ஆஸ்பத்திரில சேர்த்தாங்கள” என்று சிவா ஆரம்பிக்க...

“நிறுத்துங்க அந்தக் கதை இப்போ எதுக்கு நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்று கத்தினாள் மீண்டும்.  

கொஞ்சம் முழுசா கேட்டுட்டு பேசு துர்கா என்றவாறு தொடர்ந்தான். அன்னைக்கு ஆக்சிடென்ட் ஆகி ரோட்ல கிடந்த உங்க அப்பாவ அவுங்கதான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்காங்க. உங்க அப்பா பர்ஸ்ல இருந்த என்னோட விசிடிங் கார்ட பார்த்து அத ஹாஸ்பிட்டால கொடுத்து தகவல் சொல்ல சொல்லிட்டு அவுங்க குழந்தைய ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர நேரமாச்சுன்னு சொல்லிட்டு அவுங்க போன் நம்பர் ஹாஸ்பிட்டல்ல கொடுத்துட்டு போயிருக்காங்க. அட்மிஸ்ஸன்க்கு இரண்டு ஆயிரம் பணம் அவுங்கதான் கட்டிருக்காங்க.

அந்த பணத்த திருப்பி கொடுத்துட்டு அவுங்களுக்கு  நன்றி சொல்ல முயற்சி பண்ணி, இன்னைக்குதான் அவுங்கள சந்திக்க முடிஞ்சது. அதுவும் அவுங்க அவசர வேலையா போறதால அவுங்கள நம்ம வீட்டுக்கு கூப்பிட முடியல எனக்கும் ஒரு முக்கியமான வேலை. இரவு வந்து உன்கிட்ட அவுங்கள சந்திச்சத உங்கிட்ட பொறுமையா சொல்லலாம்னு இருந்தேன்.

 

துர்கா கண்ணீருடன் அவன் காலை பிடித்து என்னை மன்னிச்சுருங்க நான் உங்களை தப்பா நினைச்சிட்டேன் என்று கண்ணீர் விட்டாள்.       


#tamilstories, #positivestories

  

  

 

 

 

 

4 comments:

ஒரு கணவனும் மனைவியும்

  ஒரு கணவனும் மனைவியும் மாலைப்பொழுதில் நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பினர். சற்று நேரத்திலேயே இருட்டியதால் இருவரும் வேகம...