மணி இரவு பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது.
படுக்கையில் கிடந்த ராகவ் இரண்டு தலையணைகளை ஒன்றின் மீது ஒன்றாய் உயரமாக
வைத்துக் கொண்டு தலையை உயர்த்தி வைத்துக்கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து
இருந்தான்.
உறக்கம் வர மறுத்தது. இப்படியும் அப்படியும் புரண்டு பார்த்தும் உறக்கம் வரவில்லை.
விடிந்ததும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
டாக்டர் ராகவிடம் சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது, " ராகவ் விபத்தில் அடிபட்ட
உங்கள் மகளுக்கு நாளை சிறிய ஆபரேசன் செய்ய வேண்டும். ஒரு லட்சம் நாளைக்கு காலைல
கட்டிடுங்க நாளைக்கே ஆபரேசன் செய்திடலாம்."
ஒரு சிறிய நிறவனத்தில் மாதம் 15000 சம்பளத்தில் வேலை பார்த்து வந்தான் ராகவ்.
ஆனால் இப்போது பொதுமுடக்கம் உள்ளதால் அந்த வேலையும் இல்லை. அதை நம்பி இருந்த
வருமானமும் இல்லை.
இந்த சூழ்நிலையில் யாரும் உதவி செய்யும் நிலையில் இல்லை.
இப்படியும் அப்படியும் புரண்டு படுத்தான். நேரத்தை பார்த்தான் மணி மூன்று.
அசதியில் சற்றே கண் அசைந்தான்.
மனதால் தூங்க முடியாவிட்டாலும் கண்கள் தூங்க ஆரம்பித்தன.
அவனுடைய தொலைபேசி ஒலிக்கிறது.
ஏதோ ஒரு புது நம்பர். மணி வேறு ஆறு ஆகிவிட்டது.
பதட்டத்துடன் போனை எடுத்தான்.
எதிர்முனையில் இருந்து குரல்" அண்ணா நல்லா இருக்கிறீங்களா? நான் அன்பு பேசுறேன்.
போன வருஷம் எனக்கு கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் இருந்த போது
நீங்க 15000 கொடுத்து உதவி பண்ணீங்களே."
ராகவ் ஞாபகம் வந்தவனாக " ஆமாம் தம்பி நல்லா இருக்கீங்களா என்றான்."
அன்பு பதிலுக்கு " அண்ணே நல்லா இருக்குறேன். எனக்கு வேலை கிடைச்சு நேத்துதான்
முதல் மாசம் சம்பளம் ஒரு லட்சம் வாங்கினேன்."
ராகவ் பதிலுக்கு " அப்படியா, ரொம்ப நல்ல விசயம்" என்றான்.
அன்பு பதிலுக்கு " அண்ணே நீங்க பணம் கொடுக்கலேனா என்னால படிப்ப முடிச்சு இருக்க
முடியாது. நீங்க எனக்கு உறவும் இல்ல ஆனாலும் உதவி செஞ்சீங்க....அதனால இந்த
முதல் மாசம் சம்பளத்த உங்களுக்கே கொடுத்துறேன். உங்க கூகுள் பே நம்பர்
சொல்லுங்க என்றான்."
இரவு முழுவதும் தூக்கம் வராமல் உழன்ற ராகவ்க்கு இதை கேட்டதும்
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
அன்புவிடம் நம்பர் கொடுத்து விட்டு மருத்துவமனை செல்ல தயாரானான்.
No comments:
Post a Comment