Thursday, 20 May 2021

நட்புக்கு மரியாதை - சிறுகதை

 

விக்ரமின் கைபேசி அடித்தது. விக்ரம் எடுத்து கைபேசியின் திரையில் தெரிந்த பெயரை பார்த்தான். வினிதா காலிங் என்று வந்தது.

வினிதா விக்ரமின் நெருங்கிய தோழி. எப்போதும் ஒன்றாக இருப்பவர்கள். பள்ளி படிப்பில் தொடங்கிய அவர்களின் நட்பு ஒரே கல்லூரியில் சேர்ந்து படித்து, இப்போது ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வரை தொடர்கிறது.

மணி பதினொன்று இப்போ எதுக்கு போன் பண்றா என்று எண்ணி கொண்டே அழைப்பை எடுத்தான்.

மறுமுனையில் வினிதா உற்சாகமாக “விக்ரம் உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும், அதுவும் உடனே சொல்லணும்னு தான் கால் பண்ணேன்”

ம்.. சொல்லு வினி என்றான்.

“ விக்ரம், நாளைக்கு காலைல என்ன பொண்ணு பார்க்க வாரங்களாம், அதுவும் காலைல எட்டு மணிக்கே வர்றாங்களாம்.இப்பதான் போன் பண்ணி திடிர்னு சொல்றாங்க. உடனே உனக்குத்தான் நான் முதல்ல போன் பண்றேன்.” என்றாள் வினிதா.

“ அப்படியா “ என்றான் விக்ரம்.அவன் குரலில் ஏதோ ஒரு சோகம் வெளிப்பட்டது. வினிதாவிற்கும் அது தெளிவாக தெரிந்தது.

“என்ன ஆச்சு விக்ரம் உனக்கு இதில் விருப்பமில்லையா?” என்றாள் வினிதா.

சில நொடிகள் அமைதியாக இருந்த விக்ரம், பின் குரலை சரி செய்து கொண்டு பின் பேச ஆரம்பித்தான்.

வினிதா உன்கிட்ட ஒரு விசயத்த சொல்லாம மறச்சிட்டேன். அத சொன்ன நீ எப்படி எடுத்துக்குவனு தெரியல.

“என்ன விக்ரம்? என்னனு சொல்லு” படபடப்பாக கேட்டாள் வினிதா.

“அது வந்து கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் அப்பாவுக்கு நெஞ்சு வலின்னு ஆஸ்பத்திரில சேர்த்தோம்.உன்கிட்ட சொன்ன நீ உடனே ஓடி வந்துருவ அதிலும் இப்ப உன்ன பொண்ணு பார்க்க வர போறாங்க..”

“ஆனா நானும் அங்க வரமுடியாத சூழ்நிலை அதுதான் எனக்கு மனசு ஒரு மாதிரியா இருக்கு” என்றான் விக்ரம்.

மறுமுனையில் வினிதா ”விக்ரம் நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் எந்த மறைவும் இருக்க கூடாது.நாளைக்கு பொண்ணு பார்க்க வரும் போது நீ என் கூட இருந்தா தைரியமா இருக்கும். சரி நீ அப்பவ பார்த்துக்க நான் மாப்பிளை வீடு வந்துட்டு போனதும் அங்க வரேன்” என்று சொல்லி போனை வைத்தாள் வினிதா.

இருவருக்கும் இப்போது மனது சரியில்லை. விக்ரமுக்கு அந்த நேரத்தில் வினிதாவுடன் இருக்க முடியவில்லையே என்ற வருத்தம்.வினிதாவுக்கோ விக்ரம் அப்பா ஆஸ்பத்திரில இருக்கும் போது நாம் உடனே போக முடியவில்லையே என்ற வருத்தம்.

விடிந்தது. வாங்க தம்பி என்றாள் வினிதாவின் அம்மா. வினிதா யாரு வந்துருக்காங்கனு பாரு என்றாள்.வினிதா வந்து பார்த்தாள் விக்ரம் அங்கு நின்று கொண்டு இருந்தான்.

“ஹே விக்ரம், என்ன இங்க வந்து நிக்குற அதுவும் ஏழு மணிக்கு” என்றாள் வினிதா.

உன்ன பொண்ணு பார்க்க வராங்கனு சொன்னேல அதான் என் நண்பன் ஒருத்தன ஆஸ்பத்திரில அப்பா பக்கத்துல உட்கார வச்சிட்டு நான் இங்க வந்தேன். ஆனா நீ ஏன் இன்னும் பொண்ணு மாதிரி தயராகம சாதாரணமாக இருக்க” என்றான்.

“சொல்றேன் விக்ரம். வா.. நாம ஆஸ்பத்திரிக்கு போகலாம் அங்க போய் நான் சொல்றேன்” என்றாள் வினிதா.

வினிதாவுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று தன் தந்தைக்கு  மருத்துவமனை ஒதுக்கி இருக்கும் அறைக்கு அழைத்து சென்றான்.அவன் தந்தைக்கு அருகில் விக்ரமின் நண்பன் நின்று கொண்டு இருந்தான்.

டாக்டர் இப்ப வந்து பார்த்துட்டு போனாரு. ஒரு ஊசி போட்டுட்டு போயிருக்காங்க. இரண்டு மணி நேரம் கழிச்சு வந்து பாக்குறேன்னு சொல்லி இருக்காரு. இப்பதான் அப்பா கொஞ்சம் நிம்மதியா தூங்குறாரு என்றான்.

விக்ரம் வினிதாவை நோக்கி இப்பவாது சொல்லு என்ன நடந்துச்சு என்றான்.

ஒரு நிமிஷம் இருங்க ஒரு போன் பண்ணிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றால் வினிதா.

வினிதா திரும்பி வரும்போது வினிதாவுடன் அவள் அம்மா அப்பா, மேலும் மூவர் ஒரு குடும்பமாய் வருவதை பார்த்தான்.

வினிதா விக்ரமை பார்த்து “ விக்ரம் இவர்தான் அர்ஜுன் , இவர்தான் மாப்பிள்ளை இவுங்க அவரோட அம்மா, அப்பா. உங்கிட்ட பேசுன உடனே இரவே நான் அர்ஜுன்கிட்ட பேசிட்டேன். இந்த சுழ்நிலையில பொண்ணு பார்க்க வரும்போது நீ வர முடியாததால ஆஸ்பத்திரில உன் முன்னாடி சிம்பிளா மீட் பண்ணலாம்னு சொன்னேன். அவரும் சரின்னு சொல்லிடாரு.

காலைல நீ உங்க அப்பாவ இந்த நிலைமைல விட்டுடு எனக்காக ஓடோடி வந்ததையும் இவர்கிட்ட சொல்லிட்டேன்.

அவருக்கு பொண்ணு என்ன விட நம்ம பிரெண்ட்ஷிப் ரொம்ப பிடிசுருக்காம் அதனால கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாரு என்றாள்.  

விக்ரம் அப்படியே மெய் சிலிர்த்து போய் விட்டான்.

    முற்றும் 


- பாலா 

 

                 

    

      

                 

 

                     

          

      

 

         

 

 

 

No comments:

Post a Comment

ஒரு கணவனும் மனைவியும்

  ஒரு கணவனும் மனைவியும் மாலைப்பொழுதில் நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பினர். சற்று நேரத்திலேயே இருட்டியதால் இருவரும் வேகம...